சரணடைய மேலும் டைம் தர முடியாது.. சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கோரிக்கையை அது இன்று நிராகரித்தது.
1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் தண்டனைக் காலத்தில் மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் சிறைக்குச் சென்று சரணடைய நான்கு வார கால அவகாசமும் அளித்தது.
இந்த நிலையில் சஞ்சய் தத் சரணடைய மேலும் கால அவகாசம் தரக் கோரி தயாரிப்பாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கொடுத்துள்ள கால அவகாசத்தின்படி மே 16ம் தேதி சஞ்சய் தத் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications