நரோடா பிட்டியா வழக்கு - மாயா கோட்னானி, பஜ்ரங்கிக்கு சாதகமாக அப்பீல் செய்யாது குஜராத் அரசு!
அகமதாபாத்: நரோடா பிட்டியா படுகொலை வழக்கில் தூக்குத் த ண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பெண் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வதில்லை என்ற முடிவுக்கு நரேந்திர மோடி அரசு வந்துள்ளதாம்.
குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவர சம்பவத்தில் ஒன்றுதான் நரோடா பிட்டியா படுகொலைச் சம்பவம். இந்தப் படுகொலைச் சம்பவ வழக்கை விசாரித்த குஜராத் கோர்ட், முந்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்கி, நரேஷ் சாரா, மொர்லி சிந்தி, ஹரேஷ் ரத்தோட், சுரேஷ் லங்கடோ, பிரேம்சந்த் திவாரி, மனோஜ் சிந்தி, பிபின் பன்சால், சுரேஷ் என்கிற சேஷாத் ஆகிய 10 பேருக்குத் தண்டனை விதித்தது. இதில் மாயாவுக்கும், பஜ்ரங்கிக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அப்பீல் செய்ய குஜராத் அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த அனுமதியை குஜராத் அரசு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாம். இந்த இருவருக்கும் ஆதரவாக அப்பீல் செய்தால் அது மக்கள் மத்தியில் மோடி அரசுக்குப் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும், அது லோக்சபா தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் சங் பரிவார் அமைப்புகளிடையே எழுந்திருப்பதால் இந்த திடீர் பல்டி என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications