கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்து செத்துப் போன கதிர்வேலன்!
ஈரோடு: மது அருந்துவதற்கு தனது கள்ளக்காதலி பணம் கொடுக்க மறுத்ததால் விரக்தி அடைந்த இளைஞர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல். 29 வயதான இவர் வேன் டிரைவர் ஆவார். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் உடையவர். இவருக்கும், வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி கவுசல்யாவுக்கும் செல்போன் மூலம் பழக்கமாகி அது கள்ளக்காதலாக மலர்ந்தது.
இதையடுத்து அம்மாப்பேட்டைக்கு கவுசல்யாவை அழைத்து வந்து வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுத்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். சம்பவத்தன்று மது அருந்த கையில் காசு இல்லாததால் கவுசல்யாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மது அருந்த காசு தர மாட்டேன் என்று கூறியுள்ளார்.
உடனே வேதனை வந்து விட்டது கதிர்வேலுக்கு. உடனே மின் விசிறியில் தூக்குப் போட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications