விசாகப்பட்டினம் கோயில் கோசாலையில் 10 நாளில் 150 மாடுகள் பலி!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் சிம்மாசலம் சிம்மாதிரி அப்பண்ணா கோயில் கோசாலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 மாடுகள் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்மாதிரி அப்பண்ணா கோயிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை நேர்த்திக் கடனாக வழங்குகின்றனர். கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த இவற்றில் நேற்று ஒரே நாளில் 25 மாடுகள் உயிரிழந்திருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 மாடுகள் உயிரிழந்துள்ளன. கடுமையான வெயில் காரணமாகவும், உரிய பராமரிப்பு இல்லாததுமே மாடுகள் இறக்க காரணம் என்று கூறப்படுகிறது.
கோசாலையில் இறந்த மாடுகள் அனைத்தும் ஜெர்சி வகையை சேர்ந்தவை. இந்த மாடுகளுக்கு வெயிலை தாங்கும் சக்தி கிடையாது. இதனால் வெயிலின் தாக்கத்தாலேயே மாடுகள் இறந்துள்ளன என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications