ஆசிரியரின் கால் அமுக்கிவிட்ட மாணவர்கள்.. ஃபேஸ் புக்கில் படம் போட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பள்ளி மாணவர்களை கை, கால் அமுக்கிவிட வைத்து அதனை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பஷிர் அகமது. இவர் தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவர்களை, அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து தனக்கு மஜாஜ் செய்ய வைத்துள்ளார். மாணவர்களும் அதை தட்டமுடியாமல் அவர் கூப்பிடும் நேரமெல்லாம் சென்று ஆசிரியருக்கு கை, கால் அமுக்கிவிட்டுள்ளனர்.

இப்படி மாணவர்கள் தனக்கு மசாஜ் செய்வதை படம் பிடித்து அதனை பெருமையாக தமது ஃபேஸ்புக் தளத்தில் போட்டுள்ளார் பஷிர் அகமது. இந்த படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இந்த விசயம் பள்ளிக் கல்வித்துறைக்கு புகாராக சென்றதை அடுத்து அந்த ஆசிரியருக்கு சஸ்பென்ஸ் உத்தரவு பறந்து வந்தது. இப்போது வேலை வெட்டி இல்லாமல் தனது கை, கால்களை தானே அமுக்கிவிட்டுகொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+