பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் வெளியே வந்தார்

தூத்துக்குடி வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதல் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அந்த பகுதியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது.
இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் பசுபதி பாண்டியன் திண்டுக்கலில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் பெயரும் அடிபட்டது. இதனால் போலீஸ் அவரை தேடியது. இந்த தகவல் அறிந்த சுபாஷ் பண்ணையார் தலைமறைவானார்.
கடந்த ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார். இதனையடுத்து, திருச்செந்தூர் சப் -கோர்ட்டில் அவர் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
மேலும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் சுபாஷ் பண்ணையாரின் தரப்பைச் சேர்ந்த மாயா என்பவரின் உறவினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் சுபாஷ் பண்ணையார் குற்றவாளியாக உள்ளதால் இந்த வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கிலும் அவர் முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் சுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுத்துறை போலீசார் தங்களது தலைமைக்கு ஏற்கனவே தகவல் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சுபாஷ் பண்ணையாரின் நடவடிக்கைகளை உளவுத்தறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications