அதிமுக ஆட்சி நீடிக்காது... கருணாநிதி சாபம்

அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றிடக் கோரி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றகோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் நேற்று திமுக எழுச்சி நாளாக நடத்தப்பட்டது. இதையொட்டி சென்னையில்நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சேது சமுத்திர திட்டம் திமுகவின் முயற்சியால் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு அல்ல. திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்ற நோக்கத்தில், இதனை அதிமுக அரசு முடக்க முயல்கிறது.
இருண்ட தமிழகம். இருள் நிறைந்த தமிழகம். இருள் நிறைந்த தமிழகத்திலே இன்றைக்கு நாம் இருக்கின்றோம். தமிழ்நாட்டில் அமைதி இல்லை.
எங்கும் அமளி. காலையில் ஒரு கொலை, பிற்பகலிலே ஒரு கொலை, மாலையிலே ஒரு கொலை, அந்த பிணத்தை எடுத்து புதைப்பதற்குள்ளாக இரவியே ஒரு கொலை என்ற செய்தி பத்திரிகைகளில் தினசரி வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த அதிமுக ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடிக்காது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்திவிட்டு, தற்போது அரசு அமைந்ததும் அதனை எதிர்ப்பது ஏன்? 1860ம் ஆண்டு காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் தொட்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுவிட்டது.
சேதுசமுத்திர திட்டத்தை முடக்க எண்ணி, உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் கூட்டம் தான் இந்த எழுச்சி நாள் கூட்டம். இது தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பிரச்சனை. அவர்களின் தலையில் கை வைக்காதீர்கள் என்று ஜெயலலிதா அவர்களை தமிழக மக்களின் எதிர்காலம் இருள் மயமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டத்தை தடுக்காதீர்கள்.
இந்த கூட்டம், ஜெயலலிதாவை பார்த்து உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வேண்டும் என்பதற்கான கூட்டம். நான் சொன்னால் கேட்பார்களா. கேட்க கூடிய காலம் வரும். சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நமக்கு கிடைக்கும் என்றார் அவர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications