கரூர் பாமக நகர செயலாளர் ராக்கி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது
கரூர்: கரூர் பாமக நகரச் செயலாளர் ராக்கி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பொது சொத்துக்களை பல்வேறு மாவட்டங்களில் நாசம் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதி கரூர் வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்துக்கு அடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறி கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கரூர் எஸ்.பி. சந்தோஷ்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின்பேரில் ராக்கி முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டார். அதன்படி முருகேசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications