மாலையில் கரையை கடக்கும் மகாசேன் : வங்காள தேசத்தில் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
டாக்கா: இன்று மாலை மகாசேன் புயல் வங்காளதேசத்தில் கரையை கடக்க இருப்பதால் கடற்கரை ஓரத்தில் வசித்து வந்த 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று முதலில் அஞ்சப்பட்டது. ஆனால் மகாசேன் புயல் கொஞ்சம் வலுவிழந்து வடகிழக்கு பகுதி வழியாக வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து சென்றது.
புயல் தாக்கும்போது பெரும் காற்றுடன் கனமழை பெய்யுமாதலால் வங்காள தேசத்தில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் கோக்ஸ் பஜார் பகுதியில் 40 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்காள தேசத்தில் 15 மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் வசித்து வரும் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்டகாங் துறைமுகம் பகுதியில் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சிட்காங் துறைமுகமும், கோக்ஸ் பஜார் ஏர்போர்ட்டும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. புயல் தாக்குவதை அடுத்து இன்று இரவும் நாளை வடக்கு மியான்மர் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications