மாலையில் கரையை கடக்கும் மகாசேன் : வங்காள தேசத்தில் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
டாக்கா: இன்று மாலை மகாசேன் புயல் வங்காளதேசத்தில் கரையை கடக்க இருப்பதால் கடற்கரை ஓரத்தில் வசித்து வந்த 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் என்று முதலில் அஞ்சப்பட்டது. ஆனால் மகாசேன் புயல் கொஞ்சம் வலுவிழந்து வடகிழக்கு பகுதி வழியாக வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து சென்றது.
புயல் தாக்கும்போது பெரும் காற்றுடன் கனமழை பெய்யுமாதலால் வங்காள தேசத்தில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் கோக்ஸ் பஜார் பகுதியில் 40 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்காள தேசத்தில் 15 மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் வசித்து வரும் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்டகாங் துறைமுகம் பகுதியில் 30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சிட்காங் துறைமுகமும், கோக்ஸ் பஜார் ஏர்போர்ட்டும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. புயல் தாக்குவதை அடுத்து இன்று இரவும் நாளை வடக்கு மியான்மர் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications