கல்யாணத்துக்கு மறுத்த காதலனுக்கு நடுரோட்டில் சாத்துப்படி.. ஜெயிலுக்கே போனாலும் மாட்டேன் என பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

மீரட்: காதலித்து விட்டு திருமணத்திற்கு மட்டும் மறுத்த காதலனை, நடு ரோட்டில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார் காதலி. பின்னர் போலீஸ் நிலையத்திலும் ஒப்படைத்தார். ஆனால் சிறைக்கே அனுப்பினாலும் உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று அந்தக் காதலன் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

உ.பி. மாநிலம் மீரட்டில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணும், அந்த வாலிபரும் பல வருடங்களாக காதலில் மூழ்கியிருந்தனராம். இதன் விளைவாக பலமுறை உல்லாசமும் அனுபவித்துள்ளனர். ஆனால் திருமணப் பேச்சை அந்தப் பெண் எடுத்ததும் மறுத்து விட்டாராம் காதலர்.

இதனால் கோபமடைந்த அப்பெண் காதலனை சட்டையைப் பிடித்து சரமாரியாக அடித்தார். நடுரோட்டுக்கு ஓடி வந்த காதலனை விடாமல், ரோட்டில் வைத்து நையப் புடைத்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.

போலீஸார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் யார் என்றே தெரியாது. சதி செய்கிறார். நான் அவரைக் காதலிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்ய மாட்டேன். என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் அவரை மணக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதனால் போலீஸார் என்ன செய்வது என்றுதெரியாமல் குழம்பிப் போயினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+