அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்ட தேதி அறிவிப்பு
சென்னை: இம்மாதம் 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடை பெற இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் வருகிற 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக்குவது, பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளை சேர்ந்தவர்களை தயார்படுத்துவது, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்ள இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயளாளரும், அமைச்சருமான டாக்டர் வைகைச் செல்வன் தலைமையில் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்' என இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications