அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் உள்ள நபரை பிடிக்க கமாண்டோ படை... பீதியில் மக்கள்

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் காலையில் பிரதான சாலைக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி பலரையும் மிரட்டியிருக்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் சென்று தாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசருக்குத் தகவல் தெரிவிக்கப்பட சிறப்பு அதிரடிப்படையில் அங்கு குவிந்தனர்.
மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த நபருடன் ஒலிபெருக்கி மூலமும் போலீசார் பேசி சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. தற்கொலை மிரட்டல் விடுக்கும் நபரோ ஐபிஎல் பிக்சிங் தம்மிடம் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் ஊடகங்கள் போடவில்லை என்றும் சொல்கிறார்.
மனநலம் பாதிப்பா?
அதே நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பறவைகள் வரட்டும்.. பேசுகிறேன் என்கிறார். அவர் வீட்டின் ஜன்னல் வழியே ஊடகங்களுக்கு எழுதிக் கொடுத்த அறிக்கையில் சினிமா ஆபாசத்தைத் தடுக்க வேண்டும், மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றும் இதற்காக தாம் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் பிக்சிங்
ஐபிஎல் பிக்சிங்கில் ஈடுபட்டு பெரும் பணத்தை இழந்ததால் விஜயகுமார் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர். அவருடன் பெண் ஒருவரும் இருப்பதாகவும் அதே நபரே சொல்லுகிறார். ஆனால் அந்தப் பெண்ணை தாம் சுட்டுக் கொல்லமாட்டேன்..நாட்டு நலனுக்காக தன்னைத்தானே சுட்டுக் கொல்வேன் என்றும் அவர் கூறுகிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதி பரபரப்பாக இருக்கிறது. குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.
மருத்துவக்குழு வரவழைப்பு
துப்பாக்கி நபர் மூலம் அசாம்பாவிதம் ஏதேனும் நடைபெற விதம் உயிர் சேதம் ஏற்ப்பாடமல் இருப்பதற்காகவும் மருத்துவ குழு 2 முதல் உதவி வாகனங்களுடன் தயார் நிலையில் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கமாண்டோ படை
இந்நிலையில், குடியிருப்பில் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுக்கும் விஜயகுமாரை பிடிப்பதற்கு கமாண்டோ படை வரவழைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications