இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான்: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து தமிழகத்தில் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிலர் திட்டமிட்டு பிரசாரம் செய்கிறார்கள். இலங்கையில் போர் குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதேசமயம் அதனை காரணமாக வைத்து கொண்டு தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை போரில் எஞ்சிய தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைபாடு. அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களை விட இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக யார் பிரசாரம் மேற்கொண்டாலும் அதனை உரிய முறையில் கட்சி எதிர் கொள்ளும்.
மீண்டும் காங்கிரஸ் ஆட்சி
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 2 ஆண்டு கால ஆட்சியில் பல நிறைகளும், சில குறைகளும் உள்ளன. பாஜக கூட்டணியில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை அதன் கூட்டணி கட்சிகளே ஒத்துக்கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகுதான் கூட்டணிகள் முடிவாகும். ஊழல் குற்றசாற்றுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட போவதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications