பிரான்ஸ்: ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர் தற்கொலை

பிரான்ஸ் பேர்-ரைட் தேசியக் கட்சியை சார்ந்த எழுத்தாளர் டாமினிக் வென்னர் நேற்று மாலை 4 மணியளவில் தேவாலயத்தின் உள்ளே யாரும் ந்திர்பாராத நேரத்தில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு ஏறக்குறைய 1,500 அதிகமான மக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடந்தது பற்றி சுற்றுலாப்பயணியான க்ரே நினைவு கூறும்பொழுது, ‘ ஒரு பெரிய வெடிக்கும் சத்தமும், அதனைத் தொடர்ந்து ஒரு மனிதன் கீழே விழும் சத்தமும் கேட்டு நாங்கள் அதிர்ந்து விட்டோம்' எனக் கூறினார்.
தற்கொலைக்கு முன்னதாக வென்னர் தனது இணையதளப் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில், பிரான்ஸ்ல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கையாளர் திருமண ஒப்புதல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கலாச்சார சீர்கேடு உருவாகும் என தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை பலிபீடத்தில் போட்டதாக தெரிய வந்தது. அந்தக் கடிதத்தை ஆராய்ந்த போலீஸார் தனது இணையத்தில் எழுதிய அதே கருத்துக்களையே அந்த கடிதத்திலும் வென்னர் எழுதியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த தேவாலயத்திற்குள் தற்கொலை நடப்பது இதுவே முதல்முறை என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications