ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய தருணம் இது...: கமல்நாத்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் எப்போது நடைபெற வேண்டுமோ அப்போது நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் எந்தத் தேவையும் எழவில்லை. கூட்டணிக் கட்சியினர் சொல்வதை எல்லாம் அரசால் செய்ய இயலாமல் போகலாம். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களை மையப்படுத்தியே பிரச்னைகளைப் பார்க்கின்றன.
கடந்த 9 ஆண்டுகளில் சோனியா காந்திக்கும் மன்மோகனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. இதேபோல் சமீபத்தில் பதவி நீக்கப்பட்ட இரண்டு மத்திய மந்திரிகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும் பிரதமரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். வரும் தேர்தலில் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். பிரதமர் மன்மோகன்சிங் பிரதமராக 10 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார்..காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டிய தருணம் இது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications