பாஸ்டன் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு நெருக்கமானவர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பாஸ்டன்: பாஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

ஏப்ரல் 15ல் நடந்த பாஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் இந்த நபர். இவரது பெயர் இப்ராகிம் டோடஷேவ். இவரிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். ஆர்லான்டோவில் வைத்து விசாரணை நடந்தபோது, திடீரென விசாரணை அதிகாரி ஒருவரை இப்ராகிம் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இப்ராகிமை எப்.பி.ஐ அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரியவில்லை.
ஒரு வேளை இது அமெரிக்க ஸ்டைல் என்கவுண்டர் போல....!












Click it and Unblock the Notifications