குருநாத் கோரிய கால அவகாசம் நிராகரிப்பு- இன்று ஆஜர் இல்லை எனில் அரெஸ்ட் வாரண்ட்தான்!

ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் போலீசாரின் தேடுதல் வேட்டை நாட்டின் பல நகரங்களிலும் விரிவடைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நேற்று பல தரகர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் தேடப்பட்ட கிட்டி என்பவர் போலீசிடம் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பிக்ஸிங் விவகாரத்தில் ஐபிஎல் அணிகளில் முக்கிய அணியான சென்னை சூப்பார் கிங்ஸ் அணியே சிக்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்து தாராசிங்குடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் 4 பேர் நேற்று சென்னை வந்தனர். சென்னை செனடாப் சாலையில் உள்ள குருநாத் வீட்டுக்குப் போய் விசாரணை நடத்தினர். ஆனால் குருநாத் வீட்டில் இல்லை. இதனால் அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என்று அவரது உதவியாளரிடம் சம்மன் கொடுத்துவிட்டு சென்னையிலே அவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் தாம் ஆஜராவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மும்பை போலீசாரிடம் குருநாத் மெய்யப்பன் கோரியிருந்தார்.
குருநாத்தின் இந்த கோரிக்கையை நிராகரித்த மும்பை போலீசார் இன்று ஆஜராக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர். குருநாத் தற்போது எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. அவரது மாமனார் சீனிவாசன் தற்போது கொடைக்கானலில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவருடன் குருநாத் இருக்கக் கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இன்று குருநாத் ஆஜராகவில்லை எனில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications