குருநாத் கைது... மாமனார் சீனிவாசனை வெளியேற்ற லாபி செய்யும் போட்டி கோஷ்டி!

குருநாத் மெய்யப்பன், சீனிவாசனின் மருமகன். அவர் பாலிவுட் நடிகர் வின்துவுடன் தொடர்பு வைத்திருந்ததும் பெட்டிங் கெட்டி சிறைக்குப் போவதும் மருமகனின் விவகாரம். இதில் குருநாத் பெயர் அடிபட்டதுமே சீனிவாசன் தமது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தன.
இப்படி குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் 'ஓடுகாலி' லலித் மோடி. இந்தியாவில் பல முறைகேடுகளில் சிக்கியதால் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாக இருந்து வரும் லலித் மோடிதான் யோக்கியரைப் போல ரொம்பவே அழுத்தமாக குரல் கொடுத்து வருகிறார். இந்த தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கும் யோக்கிய சிகாமணியைத்தான் சில வட இந்திய தொலைக்காட்சிகள் முன்னிறுத்தி சீனிவாசனை வெளியேற்ற துடிக்கின்றன.
ஓடுகாலி லலித் மோடி கூச்சல் எழுப்புவதை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் வட இந்திய ஊடகங்கள் மற்றொரு அரசியல் கட்சியை முன்னிறுத்துகிறது. அது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இது சரத்பவாரின் கட்சி.. இந்த சரத்பவாரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தவர்தான். அவருக்கு சீனிவாசன் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள இதுதான் சந்தர்ப்பம் என பார்க்கிறார். அதனால்தான் கொஞ்சமாவது நேர்மை இருந்தால் சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
சீனிவாசன் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று எந்த ஆதாரமும் இதுவரை சொல்லப்படாத நிலையில் அதற்காக அவரை பலி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றன சில சக்திகள்.. சில வட இந்திய ஊடகங்களும் இதற்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால் இவர்கள்தான் உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்ட சஞ்சய்தத்துக்கு 'கருணை'' காட்ட வேண்டும் என்று கோருகிறார்கள்..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீனிவாசனும், என் மருமகன் மூலமாக என்னை குறி வைத்தே சிலர் செயல்படுகின்றனர். இத்ற்காக நான் ராஜினாமா செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே கூறியிருப்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications