ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு: மதுரை திமுக இளைஞரணிச் செயலாளர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

மதுரை கரிமேடு மாநகராட்சி காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன். திமுக மாநகர இளைஞரணி செயலாளராகவும், திமுக மாநகர் மாவட்ட நான்காம் பகுதி செயலாளராகவும் உள்ளார். கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை திமுக சார்பில் ஆரப்பாளையம் குறுக்கு வெட்டுச் சாலை, திருமலைநாயக்கர் படித்துறை ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகவும், அவதூறாகவும் ஜெயராமன் பேசியதாக அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.

மேலும், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனை மிரட்டிய வழக்கிலும் ஜெயராமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+