2005 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்டுகள் நடத்திய 10 அதிரடித் தாக்குதல்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பல அரசியல் தலைவர்களை கிலி கொள்ள வைத்திருக்கிறது.
மாவோயிஸ்டுகள் தங்களை வேட்டையாடும் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தினாலும் அவ்வப்போது அரசியல் தலைவர்களும் மாவோயிஸ்டுகளின் மொழியில் 'அழித்தொழிக்கப்படுவது' உண்டு.. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பெரும்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மாவோயிஸ்டுகள் நடத்திய 10 முக்கிய தாக்குதல்களைப் பார்க்கலாம்

2005ல்...
2005ஆம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி பீகாரின் ஜெகன்பாத் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒன்று திரண்டு போலீசார் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர்.

2006ல் ...
2006ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூர் அருகே பைலடியா என்ற கிராமத்தில் தேசிய சுரங்க அபிவிருத்தி கழகம் மீது தாக்குதல் நடத்தி வெடிமருந்துகளை எடுத்துச் சென்றனர் மாவோயிஸ்டுகள். இதில் 8 சிஐஎஸ்எப் படையினரை மாவோயிஸ்டுகள் பலியாகினர்.

2007ல் ஜார்க்கண்ட்டில்
2007 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் அருகே கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.பி. சுனில்குமார் மகாதோவை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். சுனில்குமாருடன் அவரது பாதுகாவலர்கள் இருவர் பலியாகினர்.

2007ல் ஜனார்த்தன ரெட்டியை இலக்கு வைத்து..
2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ந்- தேதி மாவோயிஸ்டுகள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் அம்மாநில முன்னாள் முதல்வர் என். ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் உயிர் த்ப்பினர். இதில் 3 காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.

2008ல்..
பீகாரின் ரோடாஸ் மாவட்டத்தில் ஷாசரம் என்ற இடத்தில் காவல் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர்.

2009ல் மகாராஷ்டிராவில்..
2009ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் லகேரி காவல் நிலையம் மீது தாக்குதல் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 17 போலீசார் பலியாகினர்.

2009ல் பாஜக எம்.பி சுட்டுக் கொலை
2009 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் ஜகதல்பூர் அருகே பைரகுடா என்ற கிராமத்தில் பாஜக எம்.பி. பலிராம் காஷ்யப்பும் அவரது மகன்களும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2009-ல் ஒடிஷாவில்...
2009ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலம் கோராபுட் பாக்சைட் சுரங்கம் ஒன்றின் மீதான மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 10 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

2010-ல் 75 பேர் பலி
2010அம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டம் முக்ரனா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய உக்கிரத் தாக்குதலில் 75 சி.ஆர்.பி.எப். படையினரும் போலீசாரும் கொல்லப்பட்டனர்.

2010-ல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் தாக்குதல்
2010அம் ஆண்டு சத்தீஸ்கரின் தண்டேவடா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அவ்தேஷ் கெளதம் வீட்டில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அவரது உறவினர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications