ஜெகன் ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷமாச்சு

கடந்த ஆண்டு மே 27-ந் தேதியன்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற வழக்கில் ஜெகன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை என்று சிபிஐ தொடர்ந்தும் கூறி வந்த நிலையில் அவருக்கான ஜாமீனும் மறுக்கப்பட்டே வந்தது. உச்சநீதிமன்றத்தின் கதவை கடைசியாகத் தட்டிப் பார்த்தார். அங்கும் சிபிஐ அதே பல்லவியைப் பாட விசாரணைக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்ததுடன் ஜெகனின் மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது. சிபிஐ விசாரணை முடிந்த பின்னர் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்றுடன் ஜெகன் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ஓராண்டு ஜெகன் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அவர் கைது செய்யபட்ட இன்று முதல் இரண்டு நாள் தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக ஒய்.எஸ்.ஆர். கட்சி அறிவித்தது. மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்தது. ஆளும் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகள் இரண்டுமே ஜெகன் மோகனுக்கு எதிராக சதி செய்தே சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications