தமிழக மீனவர்களுக்கு புதிய சிக்கல்கள்... மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி கோரிக்கை

மீன்பிடிக்கு அபராதம்
சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், மீன் பிடித் தடைக்காலம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் களது கவலைக்குக் காரணம், மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய நடைமுறை ஆகும். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களின் மீன் பிடிப்பு உரிமைகளும் ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் உத்தேச நடைமுறை மீனவர்களை அதிர்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
சீன கப்பல்கள்..
இலங்கைக் கடல் தொழில் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்தின என்பவர் சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்க உள்ளன என்று தெரிவித்துள்ளார். ஆழ்கடல் மீன் பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவை அனுமதித்திட இலங்கை அரசு முடிவெடுத் துள்ளதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்திருக் கிறார். இலங்கை அமைச்சர் குறிப்பிடும் பகுதிகளில் இந்திய மீனவர்களை விரட்டிவிட்டு, சீனப் படகுகளைக் கொண்டுவர உத்தேசித் திருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கை தமிழக மீனவர் களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக் கிறது.
ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளோடு தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக நாள் தோறும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இந்த இரண்டு சிக்கல்களில் இருந்தும் தமிழக அரசும் மத்திய அரசும் கப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications