திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் தயாரிப்புக்கு என்கவுன்ட்டர் வெள்ளதுரை தடை விதித்தார்!
திருப்பாச்சேத்தி: உலகப் புகழ் பெற்ற திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் சாதி கலவரங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் தயாரிப்புக்கு தடை விதிக்கப்படுவதாக டி.எஸ்.பி. வெள்ளதுரை தடை விதித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது திருப்பாச்சேத்தி. அங்கு தயாரிக்கப்படும் அரிவாள், வீச்சரிவாள்கள் உலக புகழ் வாய்ந்தவை ஆகும். ஆனால் சிலர் இதனை தவறாக பயன்படுத்துவதாலும் சாதிக்கலவரங்களை தடுப்பதற்காக திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்க தடை விதிக்கப்படுவதாக டி.எஸ்.பி. வெள்ளத்துரை அறிவித்துள்ளார்.

மேலும் விவசாயத்திற்கு பயன்படும் சாதாரண அரிவாள், பன்னரிவாள் ஆகியவற்றைத் தயாரிக்க தடை இல்லை என்றும் தடையை மீறீ வன்முறைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பவர்களை ஆயுத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications