பாமகவின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் மனு!

மேலும் தருமபுரி, மரக்காணம் கலவரச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட பாமகவினர் மீது 'தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல். புனியாவையும் அவர் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக, திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் வசித்த பகுதிகளில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டது; கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தியது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அளித்த மனுவில் விளக்கியுள்ளேன்.
'மக்கள் தொலைக்காட்சி'யில் பல்வேறு சமுதாயத்தினரிடையே பிரிவினையைத் தூண்டும் கருத்துகளை அக்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். அத்தொலைக்காட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன்.
இது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல். புனியாவிடமும் மனு அளித்துள்ளேன். இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் இந்திய பத்திரிகை கவுன்சிலிடமும் புகார் அளிக்கவுள்ளேன்," என்றார்.












Click it and Unblock the Notifications