தமிழக அரசு மீது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அன்புமணி ராமதாஸ் புகார்
டெல்லி: தமிழகத்தில் பாமக மீது தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக, தமிழக அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. மேலும், குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி பாமக நிர்வாகிகளை கைது செய்து வருகிறது என்று புகார் அளித்தார். இது போன்ற செயல்களை உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.
அதை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications