இலங்கைக்கு ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பாஜகவினரின் 'பெர்சனல் விசிட்'!
டெல்லி: இலங்கையில் தமிழர்கள் நிலை குறித்து அறிந்து வருவதற்காக அடுத்து ஒரு குழு அங்கு செல்கிறது. இந்த முறை ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான பாஜக குழுவினர் இலங்கை செல்கிறார்கள்.
இந்தக் குழுவில் மொத்தம் 3 பேர் இடம் பெறுகிறார்கள். இவர்கள் ஜூன் 4ம் தேதி டெல்லியிலிருந்து கிளம்பி கொழும்பு போகிறார்கள். அங்கு ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசி விட்டுவரப் போகிறார்கள்.
மேலும் வடக்கி்ல உள்ள தமிழர் தாயகத்திற்கும்செல்கின்றனராம். அங்கு இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் இவர்கள் பார்வையிடுவார்களாம்.
ஆனால் இந்தக் குழுவின் வருகை குறித்து தமிழ் தேசியக் கூட்டணிக்கு எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லையாம். அதை விட காமெடி இந்தியத் தூதரகத்திற்கும் இதுவரை தகவல் இல்லையாம். எனவே பாஜகவினரின் வருகை தனிப்பட்ட பயணமாக இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications