சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் தான் பர்ஸ்ட்
டெல்லி: சிபிஎஸ்இ அனைத்து மண்டலங்களுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ சென்னை மண்டலத்திற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 26ம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்று அனைத்து மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 98.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட சற்று அதிகம் ஆகும்.

இன்று வெளியான தேர்வு முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னை மண்டலத்தில் தான் தேர்ச்சி சதவீதம் அதிகம். அதாவது தேர்வு எழுதியவர்களில் 99.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன் அன்ட் டையு மற்றும் புதுவை ஆகியவை சென்னை மண்டலத்தில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications