இந்திய அமைதிப் படைக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு: 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை!
சென்னை: இலங்கையில் யுத்தமே முடிந்துவிட்டது.. ஆனால் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை சென்ற போது ராணுவத்தினருக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டு 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1987-ம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து டின் இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அதிகாரியாக ஏ.கே.குப்தா பணியாற்றினார். எஸ்.எஸ்.காடியான் என்ற ராணுவ அதிகாரி மர்கோவாவில் பணியாற்றினார்.
அமைதிப்படைக்குத் தேவையான டின் இறைச்சியை மர்கோவாவில் உள்ள கோஸ்டா என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து இவர்கள் வாங்கினர். இதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதுதொடர்பாக இவர்கள் மீது 10.12.90 அன்று சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குப்தா, காடியன், கோஸ்டா நிறுவனம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி கே. பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார். இதில் குப்தாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், காடியனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோஸ்டா கம்பெனிக்கு ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications