இந்திய அமைதிப் படைக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு: 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறை!
சென்னை: இலங்கையில் யுத்தமே முடிந்துவிட்டது.. ஆனால் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை சென்ற போது ராணுவத்தினருக்கு இறைச்சி அனுப்பியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டு 2 ராணுவ அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1987-ம் ஆண்டில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து டின் இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய அதிகாரியாக ஏ.கே.குப்தா பணியாற்றினார். எஸ்.எஸ்.காடியான் என்ற ராணுவ அதிகாரி மர்கோவாவில் பணியாற்றினார்.
அமைதிப்படைக்குத் தேவையான டின் இறைச்சியை மர்கோவாவில் உள்ள கோஸ்டா என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து இவர்கள் வாங்கினர். இதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதுதொடர்பாக இவர்கள் மீது 10.12.90 அன்று சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குப்தா, காடியன், கோஸ்டா நிறுவனம் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி கே. பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார். இதில் குப்தாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், காடியனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கோஸ்டா கம்பெனிக்கு ரூ.61 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications