சசிகலாவை விட்டு பிரிந்துவிட்டேன்.. கைதாகவில்லை! - டிடிவி பாஸ்கரன்

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் மகன் டி.டி.பாஸ்கரன் கைது செய்யப்பட்டார் என்று இன்று காலை தகவல் வெளியானது. ஆரம்பத்தில் அவர் மீது என்ன வழக்கு என்று கூறாமல் இருந்த போலீசார், பின்னர் நிலமோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறியதாக தகவல் வெளியானது.
தலைவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இந்த நிலையில் அவரது கைது செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து பாஸ்கரன் இப்போது விளக்கம் வெளியிட்டுள்ளார்.
"நான் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்த்து சிலர் பொறாமைப்பட்டு இதுபோல் செய்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை விட்டு 1997ம் ஆண்டிலேயே பிரிந்து வந்துவிட்டேன். உழைத்து முன்னேற நினைக்கும் எனது வளர்ச்சியை தடுக்க சிலர் இப்படி செய்கின்றனர். பொதுசேவையில் ஈடுபடும் எனது ரசிகர்களையும் மிரட்டுகின்றனர்," என்றார்.
ஆனால் போலீஸ் வட்டாரங்களிலோ இன்று காலை அவர் கைதானது உண்மை என்கிறார்கள்.
என்னதான்யா நடக்குது!!












Click it and Unblock the Notifications