பங்குராஜை தொங்கலில் விட்டு எழில்வானனுடன் ஓட்டம் பிடித்த அம்பிகா

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, கட்டிய கணவர் மற்றும் பெற்ற இரு குழந்தைகளையும் விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார் ஒரு பெண். இதனால் கணவரும், குழந்தைகளும் பரிதவிப்புக்குள்ளாகினர். கணவர் போலீஸில் புகார் கொடுத்து விட்டுக் காத்திருக்கிறார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் பங்குராஜ். தையல் தொழிலாளியான இவருக்கு வயது 30. இவரும் 24 வயதான அம்பிகாவும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணம் புரிந்தனர்.

இந்தத் தம்பதிக்கு 6 வயது மற்றும் ஒரு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எழில்வாணன் என்பவருடன் அம்பிகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர். பங்குராஜ் இல்லாத நேரத்தில் எழில்வாணனுடன் நெருக்கமாக இருந்து வந்தார் அம்பிகா.

இது பங்குராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்து அதிர்ந்தனர். அம்பிகாவைத் தட்டிக் கேட்டனர். அறிவுரை கூறினர். ஆனால் எதுவும் அம்பிகா காதில் ஏறவில்லை.

குடும்பத்தினர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதைப் பார்த்த அம்பிகா வீட்டை விட்டுவெளியேற தீர்மானித்தார். இதையடுத்து வீட்டில் இருந்த ரூ. 50,000 பணத்தை எடுத்துக் கொண்டு பிள்ளைகளை வீட்டில் அம்போவென விட்டு விட்டு எழில்வாணனுடன் ஓடிப் போய் விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பங்குராஜ் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மனைவியை மீட்டுத் தருமாறு அதில் அவர் கோரியுள்ளார்.

இப்படிப்பட்ட கணவர்கள் இருக்கும்வரை அப்படியாப்பட்ட மனைவிகளும் திருந்தப் போவதில்லை....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+