எனக்கும் சோனியா காந்திக்கும் எந்த கருத்து வேறுபாடு இல்லை: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: தமக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஜப்பான் மற்றம் தாய்லாந்து சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருப்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அதுபற்றி கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எப்போதுமே அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக்கக் கூடாது என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது பற்றி கேள்வி கேட்டதற்கு,அது பொய்யானது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடு இல்லை. அனைத்து பிரச்சனைகளும் நாங்கள் இணைந்தே ஆலோசித்து செயல்பட்டு வருகிறோம் என்றார். ஆனால் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்ட போது சோனியா காந்தி என்ன மாதிரியான கருத்தை வெளிப்படுத்தினார் என்ற கேள்விக்கு மன்மோகன்சிங் பதில் அளிக்கவில்லை.
இதேபோல் மக்களவைத் தேர்தலில் வென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தால் இடது சாரிகளும், மமதாவும் கூட்டணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர கூட்டணி என்பது எதுவும் இல்லை. அதேப்போல நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை என்றார். மேலும் இந்திய பொருளாதார நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்க்கையில் இந்தியாவின் பண வீக்கம் நிச்சயம் குறைவதை பார்க்கத் தான் போகிறோம். அதேப்போல பொருளாதாரமும் நிச்சயம் வளர்ச்சியை அடையும் என்றார் மன்மோகன்சிங்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications