கணவர், குழந்தைகளை கைவிட்டு விட்டு இன்னொருவருடன் குடித்தனம்.. பெண் குத்திக் கொலை
திருப்பூர்: கணவர் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு இன்னொருவருடன் ஓடி வந்து குடும்பம் நடத்தி வந்த பெண் திருப்பூரில் கொலை செய்யப்பட்டார்.
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. 25வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாரியப்பன் என்பவருடன் கள்ளக்காதலில் குதித்தார் மகாலட்சுமி. இதையடுத்து தனது கணவர், குழந்தைகளை அம்போவென விட்டு விட்டு மாரியபப்பனுடன் திருப்பூருக்குப் போய் விட்டார்.
அங்கு ராதாநகர் என்ற இடத்தில் வசிக்க ஆரம்பித்தனர். மாரியப்பன் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மகாலட்சுமி பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
கடந்த 2 நாட்களாக மாரியப்பன் வீட்டுக்கு வரவில்லை.நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். உள்ளே போன அவர் அங்கு மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் போனது. போலீஸார் உடனடியாக விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏன் இந்தக் கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
A woman was hacked to death in Tirupur. She was living with an auto driver after deserting her husband and 2 kids.












Click it and Unblock the Notifications