எனக்கு எதிராக குற்றச்சாட்டும் இல்லை, யாரும் ராஜினாமா செய்ய சொல்லவும் இல்லை: சீனிவாசன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக கைது செய்ய்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்திற்கு பிறகு சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விசாரணை முடியும் வரை நான் தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பது என்று அறிவித்துள்ளேன். ஆனால் வாரியம் செயல்பட வேண்டும் என்பதால் டால்மியாவை தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வாரிய உறுப்பினர்களில் ஒருவர் கூட என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தவில்லை. எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை. கூட்டம் மிகவும் சுமூகமாக நடந்தது என்றார்.












Click it and Unblock the Notifications