90வது பிறந்த நாளை குடும்பத்தினர், கட்சியினருடன் கொண்டாடினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இன்று காலையில் தனது சிஐடி காலனி வீட்டில் மரக்கன்று நட்டுதனது பிறந்த நாளை தொடங்கினார் கருணாநிதி. அதன் பின்னர் மெரீனா கடற்கரைக்குச் சென்ற அவர் அங்கு அண்ணா சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அண்ணாவை நினைவு கூர்ந்தார்.பின்னர் வேப்பேரிக்குச் சென்று அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் சென்ற கருணாநிதிக்கு தொண்டர்கள் பெரும்திரளாக திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அறிவாலயத்தில் பல்வேறு தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று மாலை தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications