கருணாநிதி பற்றி அவதூறாக பேசிய போதும் வழக்கு போடவில்லை… விஜயகாந்த்

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று காலை 11 மணிக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் வந்தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி நாகநாதன், வழக்கின் மறு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்களை தமிழ்நாட்டில் தடை செய்திருக்கிறார்கள், ஆனால் டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறார்கள். அதில் அதிக வருமானம் வருகிறது என்று மூட மறுக்கிறார்கள் அப்படியானால் பொதுமக்கள் சாராயத்தால் பாதிக்கப்பட்டால் பரவாயில்லையா?.
கலைஞர் ஆட்சியில் அவதூறாக பேசப்பட்ட போதெல்லாம் கருணாநிதி பொய் வழக்குகள் போடாமல் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மண்ணை கவ்வும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் வழக்கை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் விஜயகாந்த் கூறினார்.
கோபப்பட்ட விஜயகாந்த்
விஜயகாந்த் பேட்டி கொடுத்த போது, அங்கே வந்த திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் குணசேகரன், நீதிபதி உத்தரவுபடி கோர்ட் வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று விஜயகாந்திடம் கூறினார். அதற்கு விஜயகாந்த் கோபமாக அவரை பார்த்து, அப்போ ஏன் என் வண்டியை உள்ளே விட்டீர்கள் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications