ஈரான் பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு
வாஷிங்டன்: ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியா உட்பட 9 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.
அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனை அடுத்து இந்தியா, சீனா, தென்கொரியா உள்பட 9 நாடுகள் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க கெடு விதிக்கப்பட்டது. இதனால் 18.1 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா கடந்த 2012-13-ம் ஆண்டில் இறக்குமதியை 13.3 மில்லியன் டன்னாக குறைத்தது. இது 26% இறக்குமதி குறைப்பாகும் . இதே போல சீனா, மலேசியா, தென்கொரியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, துருக்கி, தைவான் ஆகிய நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்தன.
இதைத் தொடர்ந்து இந்நியா, சீனா உள்பட 9 நாடுகளுக்கும் இந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications