மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவிவிட்டது: பாஜக சாடல்!

Subscribe to Oneindia Tamil

பனாஜி: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவிவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் சாடியுள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை தீர்மானம் தொடர்பாக பாஜக இன்று விவாதித்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது அனைத்து நிலைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு தோல்வியைத் தழுவியுள்ளது்.

மத்திய அரசானது பயங்கரவாத தாக்குதலை மதவாதமாக்குகிறது. இது இந்திய இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும். மாவோயிஸ்டு விவகாரம் என்பது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. மாவோயிஸ்டுகள் தாக்குதலைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மாநில் அரசு எதிர்கொள்வதற்கு போதுமான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நமது ராணுவத்தினரின் தலையை வெட்டி எடுக்கும் போது மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைவர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துவிட்டது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி கூறியிருக்கும் தகவல் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+