நக்சலைட்டுகளை சமாளிப்பது குறித்து இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil

கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரிவர்த்தன் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியின்போது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் பலியாகினர். இந்நிலையில் நக்சலைட்டுகள் பிரச்சனையை சமாளிப்பது குறித்து இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்த யுக்திகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உரை நிகழ்த்துவார்.
இது குறித்த முடிவு கடந்த வாரம் பிரதமர் வீட்டில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications