நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக காதலர் சூரஜ் கைது
பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வி காரணமாக கடந்த 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நடிகர்கள் ஆதித்யா பஞ்சோலி, ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். இந்நிலையில் அவர் சாகும் முன்பு எழுதி வைத்த 6 பக்க கடிதம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
அதில் அவர், நீ என்னை ஏமாற்றிவிட்டாய். எனக்கு கர்ப்பமாக பயமாக இருந்தும் என்னை உன்னிடம் இழந்தேன். நம் குழந்தையை கருவிலேயே கலைத்தேன். நீ என்னை தினமும் சித்ரவதை செய்தாய். நான் உன்னிடம் காதலை எதிர்பார்த்தேன். ஆனால் நீ என் காதலை மதித்ததே இல்லை. நீ வேறு பெண்ணுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறாய் என்று எனக்கு கிடைத்த தகவலை நான் உன்னிடம் கூறவில்லை. அதை நான் கண்டுகொள்ளவில்லை. உன் மீது நம்பிக்கை வைத்தேன்.
இங்கு இருந்தால் நான் உன்னை மிஸ் பண்ணுவேன். நீ என் வாழ்க்கையை அழித்துவிட்டாய். நீ என்னை ஏமாற்றுகிறாய் என்று தெரிந்தும் உனக்காக நான் செல்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் சூரஜை நேற்று கைது செய்துள்ளனர்.