பொய்த்துப் போகிறது குறுவை சாகுபடி! நாளை மேட்டூர் அணை திறப்பு இல்லை!!

ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி அணை திறப்பது வழக்கம். இருப்பினும் காவிரி நீர் வரத்து சிக்கலால் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படாமல் போவதும் உண்டு. கடந்த 79 ஆண்டுகளில் 37-ஆவது முறையாக மேட்டூர் அணை திறப்பு தற்போது தள்ளிப்போகிறது. கடந்த 13 ஆண்டுகளில் மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போவது இது 9-ஆவது முறை.
ஜூன் 20-ஆம் தேதிக்குள் மேட்டூர் அணை தண்ணீர் வந்தால்தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாததால் குறுவை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பில்லை. நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்விட்டதால் குறுவை சாகுபடி பாதிப்படைய இருக்கிறது.
.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 18.09 அடியாகத்தான் உள்ளது. எனவே, அணையில் நீர்மட்டம் உயர்வதற்கும், அணையைத் திறப்பதற்கும் காலதாமதமாகும் நிலை நீடிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் குறுவை சாகுபடி மட்டுமல்ல சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிடும்.












Click it and Unblock the Notifications