பாத்ரூமில் குளித்து விட்டு வந்த பெண்ணின் தாலி பறிப்பு...!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரையில் பொதுக் குளியலறையில் குளித்து விட்டு வெளியே வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினர் 2 திருடர்கள்.
மதுரை புதூர் அருகே உள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அங்கயற்கண்ணி. இவர் அந்த பகுதியில் உள்ள பொது குளியல் அறையில் குளிக்க சென்றார். குளித்து விட்டு வெளியே வந்த அவர் தனது வீடு நோக்கிநடந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் திடீரென வந்தனர். பின்னர் அங்கயற்கணணியின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதைப் பார்த்து அங்கயற்கண்ணி அலறினார். ஆனால் திருடர்கள் ஓடி விட்டனர்.












Click it and Unblock the Notifications