வங்கியில் தூங்கியதால் விளையாடிய விதி! கோடிக்கணக்கில் பணம் இழப்பு
பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் பணியின்போது சோர்வடைந்து அப்படியே கம்ப்யூட்டர் கீ போர்டின் மீது கைகளை வைத்துப் படுத்துத் தூங்கி விட்டார்.... ஆனால் அதன் விளைவு தவறான நபருக்கு பெருமளவிலான பணத்தை மாற்றி இப்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
ஒரு குட்டித் தூக்கம் இப்போது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கிலும் சிக்கி விட்டார்.
பணியின்போது அசட்டையாக இருந்தால் என்ன மாதிரியான விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த ஊழியரைத்தான் தற்போது ஜெர்மனியில் அனைவரும் உதாரணமாக கூறிக் கொண்டிருக்கின்றனராம்.

சற்றே கண்ணயர்ந்தார்
ஜெர்மனியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பணியில் இருந்த போது சற்று கண்ணயர்ந்து விட்டார். ஓய்வு பெற்ற ஊழியர் சம்பந்தமான கணக்குகளைஉ வரவு வைக்கும் போது உறங்க ஆரம்பித்த ஊழியர் தலையை கம்யூட்டர் கீபோர்டில் வைத்து விட்டார். இதனால் இரண்டு என்ற எண் 11 முறை பதிவாகிவிட்டது.

அனுப்ப வேண்டியது 62.40 ஈரோதான்
அந்த ஊழியர் ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குக்கு 62.40 ஈரோ பணத்தை ஆன்லைனில் மாற்ற வேண்டும்.

தூங்கியதால் வந்த வினை
ஆனால் பணியின்போது சோர்வு காரணமாக அவர் அப்படியே கீபோர்டிலேயே படுத்துத் தூங்கி விட்டார். அங்குதான் அவருக்கு விதி விளையாடி விட்டது.

293 மில்லியன் ஈரோ
இதனால், அந்த வாடிக்கையாளரின் கணக்கில் 62.40 யூரோக்கள் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக 222,222,222,22 யூரோக்களாக பதிவானது. அவரின் மேலதிகாரியும் இந்தத் தவறைக் கவனிக்காமல் கையெழுத்திட்டு விட்டார். பின்னர் தவறு வேறு துறையினரால் கவனிக்கப்பட்டதால் சரி செய்யப்பட்டது.

போடுங்கப்பா வழக்கை
தற்போது இந்த ஊழியர் மீது வங்கி சார்பில் தொழிலாளர் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர். அதேபோல வேலையை விட்டும் தூக்கி விட்டனர்.
தூங்காதே தம்பி தூங்காதேன்னு சும்மாவா சொன்னாரு வாத்தியாரு....
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications