டெய்லி ஓசி சாப்பாடு தரணும் - அடாவடி செய்த போலீஸ்காரர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தினசரி தங்களது காவல் நிலையத்துக்கு காசு வாங்காமல் சாப்பாடு தர வேண்டும் என்று கூறி மிரட்டி வந்த போலீஸாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர்களான தர்மராஜ், மணி, ஷண்முகம், சேதுராமன் ஆகியோர் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் (சஸ்பெண்ட் ஆகி விட்டார்), முன்னாள் தலைமை காவலர் வி. திருவேங்கடம் ஆகியோர் எங்கள் ஓட்டலில் 2002-ம் ஆண்டிலிருந்து கடனுக்கு சாப்பாடு வாங்கி சென்றனர். கடன் தொகையை கேட்டபோது தர மறுத்தனர்.

அத்துடன் தினந்தோறும் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த 4 போலீஸ்காரர்களுக்கு காசு வாங்காமல் இலவசமாக காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு ஆகியவை தர வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு மறுத்ததால் எங்கள் ஓட்டல் ஊழியர்கள் 2 பேரை அடித்து அவர்கள் மீது போலீசார் பொய் கேஸ் போட்டனர் என்று தெரிவித்திருந்திருந்தனர்.

இதுகுறித்து ஆணையத் தலைவர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதை தமிழக அரசே வழங்க வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட போலீஸாரின் சம்பளத்திலிருந்து அதை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+