திருப்பதியில் வாகன ரெய்டு...ரூ. 2.30 கோடி மதிப்புள்ள ‘முடி’ சிக்கியது!
திருப்பதி: திருப்பதியில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 2.3 கோடி மதிப்புள்ள 4 டன் தலைமுடியை பறிமுதல் செய்தனர்..
திருப்பதியின் பிரதான வேண்டிதலாக முடி காணிக்கை அளித்தல் உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சிலர் வேண்டுதல்களுக்காக தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
குபேரக் கடவுளான ஏழுமலையானின் கோவிலில் டன் கணக்கில் சேரும் தலைமுடியை திருப்பதி தேவஸ்தானம் டெண்டர் மூலம் ஏலம் விட்டுவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சென்னையை சேர்ந்த ரேணுகா விக்னேஷ்வரா சுப்ரீம் ஸ்ரீனிவாச டிரேடர்ஸ் நிறுவனங்களுக்கு 6,700 கிலோ தலைமுடியை பல கோடி ரூபாய்க்கு தேவஸ்தானம் விற்பனை செய்பப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு டெண்டர் மூலமாக பெறப்பட்ட தலைமுடியை சம்பந்தப்பட்ட நிறுவனத்தார், திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள தேவஸ்தான குடோனில் இருந்து நேற்றிரவு லாரி, கார்களில் கொண்டு சென்றுள்ளனர். திருப்பதி அடுத்த கபிலதீர்த்தம் அருகே ஆந்திர மாநில வணிக வரித்துறை கண்காணிப்பு அமலாக்க துறை போலீசார் வாகனங்களை தடுத்து சோதனை செய்த போது, லாரியில் இருந்த 5 டன் தலைமுடிக்கான அனுமதி சீட்டு மற்றும் ஆந்திர அரசுக்கு சொந்தமான வரி செலுத்திய ரசீது இருந்ததுள்ளது.
பின்னர், லாரியை பின்தொடர்ந்து வந்த 3 கார்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து பார்த்ததில், ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 4 டன் தலைமுடி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ஆனால், அம்முடிகளுக்கான முறையான ரசீதுகளோ, அனுமதிச் சீட்டோ இல்லை.
இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில், காரில் இருந்த தலைமுடியை போலீசார் பறிமுதல் செய்தனர். முடி கடத்தல் விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications