கரூர் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் ஆர்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியில் உள்ள இந்தியன் ஹெரிடேஜ் ஹோட்டலில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் உள்பட 17 பேர் தகராறு செய்ததாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் கடந்த மே 5ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மாரப்பன் தலைமையில் வழக்கறிஞர்கள் கடந்த 10ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு மாரப்பன் தலைமையிலான வழக்கறிஞர்கள் கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் கரூர் டவுன் டி.எஸ்.பி. இளங்கோ பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications