ஜெய்ப்பூர் மருத்துவமனையில் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்த வார்டு பாய் கைது
ஜெய்ப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தம்பியைப் பார்த்துக் கொள்வதற்காக தங்கிய திருமணமான பெண்ணை அந்த மருத்துவமனையின் வார்டு பாய் கற்பழித்து விட்டார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மருத்துவமனையில் 28 வயதுப் பெண் ஒருவரின் தம்பி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் கணவரை அணுகிய வார்டுபாய் ராம்விதார் பலாய் என்பவர், மருத்துவமனையின் காட்டேஜில் உங்களது மைத்துனரை அனுமதியுங்கள். நான் கட்டண சலுகை பெற்றுத் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு தனது மைத்துனரை அனுமதித்தார் இளம்பெண்ணின் கணவர். பின்னர் அவர்தனது மனைவியையும், மைத்துனரையும் காட்டேஜில் விட்டு விட்டு கடைக்குப் போனார்.
அவர் போய் விட்டு வருகிற இடைவெளிக்குள், அப்பெண்ணை பலாத்காரம் செய்து விட்டார் ராம்விதார் பலாய். இதனையடுத்து கணவர் அளித்த புகாரின் பேரில் பலாயை போலீஸார் கைது செய்தனர். மருத்துவமனை நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications