பவளவிழா காணும் சென்னை அகில இந்திய வானொலி நிலையம்
சென்னை: சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு 75 வயதாகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக பவளவிழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அகில இந்திய வானொலி நிலையம் சென்னை எழும்பூரில் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ராஜாஜி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். 1954ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சென்னை காமராஜர் சாலைக்கு வானொலி நிலையம் இடம் மாற்றப்பட்டது. இந்நிலையில் வானொலி நிலையம் தனது 75வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளதாக சென்னை வானொலியின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.பி. சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விவிதபாரதி சேவை
சென்னை வானொலியில் 1957 விவிதபாரதி சேவையும், 1968-ல் வர்த்தக ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. இப்போது எப்.எம். ஒலிபரப்பிலும் சாதனை படைத்து வருகிறது.இந்நிலையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை வானொலியின் பவள விழா வரும் ஜூன் 18-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நடைபெறவுள்ளது.
பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி ஜவஹர் சர்க்கார், பிரசார் பாரதி கமிட்டி உறுப்பினர் வி.ஏ.எம். ஹூசைன், அகில இந்திய வானொலியின் இயக்குநர் ஜெனரல் லீலாதர் மண்டோலி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இவ்விழாவில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா, என்.சி. காண்டீபன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.பவள விழாவை முன்னிட்டு 1938-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை வானொலி தொடக்க விழாவில் ராஜாஜி ஆற்றிய உரை வரும் 16-ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை ஏ அலைவரிசையில் ஒலிபரப்பப்படும்.இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டு 86 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் வரும் ஜூன் 23-ம் தேதி சிறப்பு மலர் வெளியிடப்படும்.
பவள விழாவை முன்னிட்டு கடந்த ஓராண்டாக ஆவண காப்பகத்தில் இருந்து காமராஜர், அண்ணா, கிருபானந்த வாரியார் போன்றவர்களின் அரிய உரைகள், பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் ஆவண காப்பகத்தில் இருந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தலைவர்களின் உரைகள், இசை, பாடல், நாடகம் என சென்னை வானொலியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய பதிவுகள் உள்ளன.75 ஆண்டுகளாக மக்கள் சேவையில் உள்ள சென்னை வானொலி வணிக ரீதியாகவும் வெற்றி கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 20 கோடிக்கும் அதிகமாக விளம்பர வருவாய் கிடைக்கிறது என்றும் கே.பி. சீனிவாசன் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications