ஜியாகானின் கடைசிக் கடிதம் போலியானதா?: அதிர்ச்சியில் போலீசார்
டெல்லி: சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியாகான் தன் காதலருக்கு கடைசியாக எழுதியதாகக் கூறப்பட்ட ஆறு பக்க கடிதம் பொய்யானதாக இருக்கலாமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
25 வயதான நடிகை ஜியாகான் சில வாரங்களுக்கு முன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணத்திற்கு திரையுலகமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய நிலையில் , தற்கொலையின் பிண்ணனியில் காதல் விவகாரம் இருப்பது தெரிய வந்தது.
ஜியாகானின் காதலர் சூரஜ் பன்சோலி ‘தற்கொலைக்கு தூண்டியதாக' கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், ஜியாகானின் தற்கொலைக்கு முந்தைய கடைசிக் கடிதம் போலியானதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நிசப்தமாக முடிந்த ஜியாவின் வாழ்க்கை...
அமிதாப்புடன் , ராம் கோபால் வர்மா படத்தில் நடித்த ‘நிசப்த்' திரைப்படம் ஜியாகானின் நடிப்புத் திறமையை திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜூன் 3ம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜியாகான், தனது திரையுலகக் கனவுகளை இத்துடன் முடித்துக் கொள்வதாக தன் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜியாவின் காதல் தோல்வி...
ஜியாகானின் தற்கொலைக்கு பிண்ணனியில் அவரது காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பாலியல் சித்ரவதைகளே இருந்தன என அவரது தாயாரும், சகோதரியும் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு ஆதாரமாக, ஜியாகான் கடைசியாக எழுதிய கடிதம் என ஆறு பக்க கடிதம் ஒன்றை போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர்.

சூரஜ் உடனான காதல்...
அக்கடிதம் ஜியாகானின் இல்லத்தில், அவரது தற்கொலைக்குப் பின் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், ஜியாகானின் காதலரும், பிரபல நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பன்சோலி மற்றும் ஜரீனாவின் மகனான சூரஜ் பன்சோலி கைது செய்யப்பட்டார்.

கடைசிக் கண்ணீர் கடிதம்...
ஜியாகானின் கடைசிக்கடிதம் எனச் சொல்லப்பட்ட ஆறுபக்கக் கடிதத்தில், சூரஞ் உடனான தனது காதல் அதன் மூலம் தான் பட்ட உடல் மற்றும் மன வேதனைகளை விவரித்திருந்தார் ஜியா. சூரஜின் குழந்தையைக் கூட கருக்கலைப்பு செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

சோதனையில் சிக்கிய காதல் கடிதங்கள்...
தனது மகன் மீது தவறொன்றுமில்லை என தொடர்ந்து ஜரீனா கூறி வந்த நிலையில் போலீசார் சூரஜின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஏற்கனவே, ஜியாகான் எழுதிய மேலும் ஐந்து காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

அது வேற... இது வேற...
ஜியாகானின் கடைசி மற்றும் முந்தைய கடிதங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் அதிர்ந்த்து விட்டனர். காரணம் இரண்டிலும் கையெழுத்து மாறுபட்டது தான்.

தடவியல் சோதனைக்குப் பிறகே முடிவு...
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ‘முறையான தடயவியல் பரிசோதனைக்குப் பிறகே எங்களால், சரியான முடிவைச் சொல்ல முடியும். ஆனால், பார்ப்பதற்கு ஜியாகானின் கடைசிக் கடிதமான ஆறு பக்கக் கடிதத்திற்கும், சோதனையில் சிக்கிய பழைய காதல் கடிதத்தில் இருக்கும் கையெழுத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

எது உண்மை...?
ஜியாகானின் கடைசி கடிதம் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் ஐந்து கடிதங்கள் சூரஜ் வீட்டில் கிடைத்தவை. இவற்றில் எவை உண்மையானது, எவை போலியானது என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications