இப்படி பொத்துக்கிட்டு ஊத்துதே: கவலையில் வட இந்தியர்கள்
டெல்லி: வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி மொத்தம் 130 பேர் பலியாகியுள்ளனர்.
வட இந்தியாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கியது மக்களுக்கு முதலில் மகிழ்ச்சியை அளித்தபோதும் தற்போது கவலை அளித்துள்ளது. பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே கனமழை பெய்து உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

அரசு விருந்தினர் மாளிகை
உத்தரகண்ட் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அரசு விருந்தினர் மாளிகை இடிந்து விழுந்தது.

ரிஷிகேஷ்
ரிஷிகேஷில் உள்ள சிவன் சிலையில் மாரளவு ஓடும் கங்கை வெள்ளம்.

பத்ரிநாத்
உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பத்ரிநாத் செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

மீட்பு பணி
சமோலி மாவட்டத்தில் உள்ள கோவிந்த் காட்டில் சிக்கித் தவித்த பக்தர்கள் மற்றும் குழந்தைகளை மீட்ட மீட்பு குழுவினர்.

மந்தாகினி
சமோலி மாவட்டத்தில் கரைபுரண்டோடும் மந்தாகினி ஆறு.

விஜய் பகுகுனா
உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுனா டேராடூனில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட்டார்.

யமுனா
டெல்லியில் யமுனா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை கிட்டத்தட்ட தொடப் போகும் வெள்ளம்.

2 நாட்களுக்கு மழை பெய்யாது
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications