இந்தியாவால் தேடப்படும் ஹபீஸ் சயீதுக்கு ரூ.6.1 கோடி கொடுத்த பாகிஸ்தான் அரசு
Subscribe to Oneindia Tamil

பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் தலைமையிலான பிஎம்எல்-என் அரசு கடந்த திங்கட்கிழமை 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய
அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹபீஸ் சயீதின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு ரூ.61 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
ஜமாத் உத் தவாவின் தலைமையிடம் லாகூருக்கு வெளியே இருக்கும் முரித்கேயில் உள்ளது. முரித்கேயில் நாலேஜ் பார்க் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் முஜ்தபா ஷஜாவுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். நாலேஜ் பார்க் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக ரூ.35 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2009-2010ம் ஆண்டில் ஜமாத் உத் தவாவுக்காக பஞ்சாப் மாகாண அரசு ரூ.82 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications